ஒருகவிஞனாக,எழுத்தாளனாக,பாடலாசிரியனாக,இசையமைப்பாளனாக,கட்டுரையாளனாக, விமர்சகனாக, நகைச்சுவையோடுகூடியஒரு மேடைநடிகனாக என்று பல பரிமாணங்களைக் கொண்ட திரு.இராஜதுரை.தெய்வராஜன்,
திருக்கோவில்,தம்பிலுவிலுக்கு சொந்தக்காரன்தான்.எமது இரண்டு மண்களும் சேர்ந்த கலவையாகவே இந்த மகா கலைஞனை பார்க்கமுடிகிறதுதிருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தொடர்ந்து தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் படித்து அறுபத்திரெண்டாம் ஆண்டு க.பொ.த(சாதாரணம்) பரீட்சையில் சித்தியடைந்தார்.பின்,அறுபத்திமூன்று, அறுபத்தினாலில்.கரடியனாறு
விவசாயப் பாடசாலையில் படித்துத் தேறினார்.அறுபத்தியைந்தில் கூட்டுறவு முகாமையாளராகினார்.
படிக்கும் காலத்தில் பாடசாலையில் இவர் நடித்த நாடகங்கள் மிகவும் பேசப்பட்டன. மறைந்த எம் மண்ணின் மற்றுமொரு மகா கலைஞன்
நகைச்சுவை மன்னன் திரு.ஆச்சரியம்,அமரர்.கவீந்திரன், மற்றும் கலைஞர்களுடன் இவர் சேர்ந்து பல நாடகங்களை நடித்திருக்கின்றார்.
சிலவேளைகளில் முன் ஆயத்தங்கள் இல்லாமலே,மேடைக்குப் பின்னால் நின்று பாத்திரங்களை உருவாக்கி,அதை மேடையில் நடித்து,
ஊர் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் இவர்."தம்பி கொழும்பில""புட்டுக்குழல்" அவள் வரமாட்டாள்"போன்ற நாடகங்கள் இவரின்
நகைச்சுவைக்கு கட்டியம் கூறுபவைகளாக அமைந்தன.
அறுபத்தியெட்டில் விசேச ஆசிரியர் நியமனம் கிடைத்தபின்பு ஒரு நல்ல ஆசிரியராக மாறி,எழுபதிலிருந்து-எழுபத்திரெண்டுவரை,
மட்/ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சிபெற்று பயிற்றப்பட்ட ஆசிரியனாக வந்தார்.இக்காலப்பகுதியில் மடக்களப்பில் இருந்த,
"ஜெயாலயா"இசைக்குழு,ஜீவன் இசைக்குழு,ஆகிய இசைக்குழுக்களில் முதன்மைப் பாடகனாகவும்,இசையமைப்பாளனாகவும்,தன்
திறமையை வெளிக்காட்டினார்.இக்காலக்கட்டத்திலேதான் இவரது மைத்துணர் திரு.கோவிலூர் செல்வராஜனுக்கும் இசையிலும்,
கலையிலும் ஆர்வத்தைக் கொடுத்து அவரை ஊக்குவித்து ,இன்று நாடறிந்த கலைஞனாக அவர் வருவதற்கு பெரும் பங்காற்றினார்.
மறைந்த கவிஞர் திரு.எருவில் மூர்த்தி அவர்களின் பாடல்களை, இவரும்,கோவிலூரும் பாடி அவற்றை இலங்கை வானொலிவரைக்கும்
எடுத்துச் சென்றார்கள்.திரு.தெய்வராஜன் பாடிய "கொழும்புக்குப்போய் திரும்பி வந்த போடியார்" "தங்கச்சி தங்கச்சி தடம்புரண்டு போகாதே"
அண்ணாச்சிஅண்ணாச்சி ஐயோ இதென்ன கோலம் "போன்ற பொப் பாடல்கள் மட்டுநகர் பிரதேசம் முழுதும் மிகப் பிரபல்யம் வாய்ந்தனவாக
இருந்தன.மாமாங்கப்பிள்ளையார்,சித்தாண்டி முருகன்,திருக்கோவில் முருகன்,ஆகிய கோவில்களின் உற்சவகாலங்களில் இவருடைய
இசைக்குழுவின் நிகழ்ச்சி கட்டாயமாக இருக்கும்.
பயிற்றப்பட்ட வெளிவந்த பின்பு இவருக்கு ஹட்டன் ஹைலாட்ஸ் பாடசாலையில் நியமனம் கிடைத்தது.அங்கும் கலை,இலக்கிய
முயற்ச்சியில் முன்னணி வகித்தார்.பின்பு,எழுபத்தியாறில் மட்/அரசினர் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றார்.பின்பு மட்/மத்திய
கல்லூரியில் பணியாற்றினார்.இக்காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னை வெளிவாரிப் பட்டதாரியாகப் பதிவு செய்துகொண்டு,பட்டப் படிப்பை மேற்கொண்டு எழுபத்தி எட்டில் ஒரு கலைப் பட்டதாரியாக ஆனார்.
ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மட்டுநகர் வாவியில் இவர்களின் இசைநிகழ்ச்சி நடக்கும்.இது மிக வரவேற்பை பெற்றது.
எண்பதில் ஒரு வருட விடுப்பு எடுத்துக்கொண்டு,சவூதி அரேபியாவுக்கும் தொழில் வாய்ப்பு பெற்று சென்று வந்தார்.
பின்பு நாடு திரும்பிய இவர் மட்/மகிழவெட்டுவான்,கன்னங்குடா ஆகிய மகாவித்தியாலயங்களில் கொத்தணி பேராசிரியராக
கடைமையாற்றி எண்பத்தியைந்தில் ஓய்வு பெற்றார்.பின்பு இவர் தமிழ் நாட்டுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தார்.
பல்கலைத் திறமைகொண்ட திரு.இரா.தெய்வராஜனும்,அவரது மைத்துணர் கோவிலூர் செல்வராஜனும் சேர்ந்து
எமது ஊர் பகுதிக் கோவில்களுக்காக பல பாடல்களைப் பாடி வெளியிட்டிருக்கின்றார்கள்.இவையெல்லாம் இன்று
எமது கோவில்களில் பாடப்படுகின்றன.இவற்றை நாம் எமது இணையத்தளத்திலும் சேர்த்திருக்கின்றோம்.தொடர்ந்து
இவர் பாடிய கும்மிப் பாடல்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.அவற்றையும் நாங்கள் எமது தளத்தில்
சேர்த்து கொள்ளவிருக்கின்றோம் .
தமிழ் நாட்டில் இருந்து அடிக்கடி ஊர் வந்து போகும் திரு.தெய்வராஜன் எம் மக்களின் நலன் கருதி பல ஆக்கபூர்வமான
செயல்பாடுகளில் இனி இறங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்.வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஆக்கமும்,
ஊக்கமும் கொடுக்கவேண்டுமென்றும் ஆர்வமாக இருக்கின்றார்.
ஒரு நல்ல பொதுநலவாதியாக,சமூகசேவகனாக,மனிதநேயனாக,எல்லோருக்கும் எப்பொழுதும் உதவக்கூடிய
ஒரு பெரும் குணம் கொண்ட பேராளனாக இருக்கும் திரு.தெய்வராஜனை,பல்லாண்டு வாழ்ந்து இன்னும் பல
கலைப் படைப்புகளை எம் மக்களுக்காக தரவேண்டும்மென்று எமது இணையத்தளத்தின் சார்பாக நாம்
வாழ்த்துகின்றோம்.

விவசாயப் பாடசாலையில் படித்துத் தேறினார்.அறுபத்தியைந்தில் கூட்டுறவு முகாமையாளராகினார்.
படிக்கும் காலத்தில் பாடசாலையில் இவர் நடித்த நாடகங்கள் மிகவும் பேசப்பட்டன. மறைந்த எம் மண்ணின் மற்றுமொரு மகா கலைஞன்
நகைச்சுவை மன்னன் திரு.ஆச்சரியம்,அமரர்.கவீந்திரன், மற்றும் கலைஞர்களுடன் இவர் சேர்ந்து பல நாடகங்களை நடித்திருக்கின்றார்.
சிலவேளைகளில் முன் ஆயத்தங்கள் இல்லாமலே,மேடைக்குப் பின்னால் நின்று பாத்திரங்களை உருவாக்கி,அதை மேடையில் நடித்து,
ஊர் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் இவர்."தம்பி கொழும்பில""புட்டுக்குழல்" அவள் வரமாட்டாள்"போன்ற நாடகங்கள் இவரின்
நகைச்சுவைக்கு கட்டியம் கூறுபவைகளாக அமைந்தன.
அறுபத்தியெட்டில் விசேச ஆசிரியர் நியமனம் கிடைத்தபின்பு ஒரு நல்ல ஆசிரியராக மாறி,எழுபதிலிருந்து-எழுபத்திரெண்டுவரை,
மட்/ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சிபெற்று பயிற்றப்பட்ட ஆசிரியனாக வந்தார்.இக்காலப்பகுதியில் மடக்களப்பில் இருந்த,
"ஜெயாலயா"இசைக்குழு,ஜீவன் இசைக்குழு,ஆகிய இசைக்குழுக்களில் முதன்மைப் பாடகனாகவும்,இசையமைப்பாளனாகவும்,தன்
திறமையை வெளிக்காட்டினார்.இக்காலக்கட்டத்திலேதான் இவரது மைத்துணர் திரு.கோவிலூர் செல்வராஜனுக்கும் இசையிலும்,
கலையிலும் ஆர்வத்தைக் கொடுத்து அவரை ஊக்குவித்து ,இன்று நாடறிந்த கலைஞனாக அவர் வருவதற்கு பெரும் பங்காற்றினார்.
கோவிலூர் செல்வராஜன் , பாடகி நித்யஸ்ரீ , மற்றும் தெய்வராஜன் அவர்கள் |
மறைந்த கவிஞர் திரு.எருவில் மூர்த்தி அவர்களின் பாடல்களை, இவரும்,கோவிலூரும் பாடி அவற்றை இலங்கை வானொலிவரைக்கும்
எடுத்துச் சென்றார்கள்.திரு.தெய்வராஜன் பாடிய "கொழும்புக்குப்போய் திரும்பி வந்த போடியார்" "தங்கச்சி தங்கச்சி தடம்புரண்டு போகாதே"
அண்ணாச்சிஅண்ணாச்சி ஐயோ இதென்ன கோலம் "போன்ற பொப் பாடல்கள் மட்டுநகர் பிரதேசம் முழுதும் மிகப் பிரபல்யம் வாய்ந்தனவாக
இருந்தன.மாமாங்கப்பிள்ளையார்,சித்தாண்டி முருகன்,திருக்கோவில் முருகன்,ஆகிய கோவில்களின் உற்சவகாலங்களில் இவருடைய
இசைக்குழுவின் நிகழ்ச்சி கட்டாயமாக இருக்கும்.
பயிற்றப்பட்ட வெளிவந்த பின்பு இவருக்கு ஹட்டன் ஹைலாட்ஸ் பாடசாலையில் நியமனம் கிடைத்தது.அங்கும் கலை,இலக்கிய
முயற்ச்சியில் முன்னணி வகித்தார்.பின்பு,எழுபத்தியாறில் மட்/அரசினர் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றார்.பின்பு மட்/மத்திய
கல்லூரியில் பணியாற்றினார்.இக்காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னை வெளிவாரிப் பட்டதாரியாகப் பதிவு செய்துகொண்டு,பட்டப் படிப்பை மேற்கொண்டு எழுபத்தி எட்டில் ஒரு கலைப் பட்டதாரியாக ஆனார்.
ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மட்டுநகர் வாவியில் இவர்களின் இசைநிகழ்ச்சி நடக்கும்.இது மிக வரவேற்பை பெற்றது.
எண்பதில் ஒரு வருட விடுப்பு எடுத்துக்கொண்டு,சவூதி அரேபியாவுக்கும் தொழில் வாய்ப்பு பெற்று சென்று வந்தார்.
பின்பு நாடு திரும்பிய இவர் மட்/மகிழவெட்டுவான்,கன்னங்குடா ஆகிய மகாவித்தியாலயங்களில் கொத்தணி பேராசிரியராக
கடைமையாற்றி எண்பத்தியைந்தில் ஓய்வு பெற்றார்.பின்பு இவர் தமிழ் நாட்டுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தார்.
பல்கலைத் திறமைகொண்ட திரு.இரா.தெய்வராஜனும்,அவரது மைத்துணர் கோவிலூர் செல்வராஜனும் சேர்ந்து
எமது ஊர் பகுதிக் கோவில்களுக்காக பல பாடல்களைப் பாடி வெளியிட்டிருக்கின்றார்கள்.இவையெல்லாம் இன்று
எமது கோவில்களில் பாடப்படுகின்றன.இவற்றை நாம் எமது இணையத்தளத்திலும் சேர்த்திருக்கின்றோம்.தொடர்ந்து
இவர் பாடிய கும்மிப் பாடல்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.அவற்றையும் நாங்கள் எமது தளத்தில்
சேர்த்து கொள்ளவிருக்கின்றோம் .
தமிழ் நாட்டில் இருந்து அடிக்கடி ஊர் வந்து போகும் திரு.தெய்வராஜன் எம் மக்களின் நலன் கருதி பல ஆக்கபூர்வமான
செயல்பாடுகளில் இனி இறங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்.வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஆக்கமும்,
ஊக்கமும் கொடுக்கவேண்டுமென்றும் ஆர்வமாக இருக்கின்றார்.
ஒரு நல்ல பொதுநலவாதியாக,சமூகசேவகனாக,மனிதநேயனாக,எல்லோருக்கும் எப்பொழுதும் உதவக்கூடிய
ஒரு பெரும் குணம் கொண்ட பேராளனாக இருக்கும் திரு.தெய்வராஜனை,பல்லாண்டு வாழ்ந்து இன்னும் பல
கலைப் படைப்புகளை எம் மக்களுக்காக தரவேண்டும்மென்று எமது இணையத்தளத்தின் சார்பாக நாம்
வாழ்த்துகின்றோம்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!