(W. Dicksith)
திருக்கோவில் பாலக்குடா பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று என பரவும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாத் தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில்,
திருக்கோவில் பிரதேசத்தில் இதுவரை கொரோனா நோயாளிகள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும் தற்போது மிக வேகமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மக்களைச் சென்றடைவதை தடுப்பதற்கு உதவ வேண்டும், ஒரு நபர் தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள சரியான செய்தியை குறித்த இணையதளம் அல்லது சமூக ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்க விரும்புகின்றேன். என்றார்.