அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரம் பாலக்குடா , தாண்டியடி ,தம்பிலுவில் , குடிநிலம் பிரதேச மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன .
அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள நாளாந்த கூலி தொழில் செய்து வந்த தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வற்றிநியூஸினால் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் ஒரு லட்சத்து பதினையாயிரம் ரூபா நிதியில் இவ் நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது .
திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் பார்த்தீபன் , பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுபோ , தம்பிலுவில் சிவன் கோவில் நிர்வாகத்தினர் , தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழக தலைவர் காந்தன் , விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழக தலைவர் ஜீனோ மற்றும் வற்றிநியூஸ் குழுவினர் இணைந்து வழங்கி வைத்தனர் .