
இந்நிகழ்வின் போது ஒரு விழிப்புணர்வு பேரணி நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப்பிரிவினர் மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப் பேரணியானது எழுத்தறிவே தேசத்தின் நிலையான அபிவிருத்தியின் ஆதாரம் எனும் தொனிப்பொருளில் கீழ் இடம்பெற்றது. மேலும் இப் பேரனின் போது சர்வதேச எழுத்தறிவு தினம் மற்றும் எழுத்தறிவு கல்வியின் முக்கியத்துவம் பற்றிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!