அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வானது கடந்த 29.06.2017 திகதி வியாழக்கிழமை மாலை பூசையைத் தொடர்ந்து கருமாரம்பம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுஞ்யை, வாஸ்து சாந்தி முதலிய கிரியைகளுடன் சங்காபிஷேக நிகழ்வு ஆரம்பமாகிமறுநாள் 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை காலை பூசையை தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், யாகமண்டப பூசை, வேதிகா அர்ச்சனை, சங்குப்பூசை, அக்னி கார்யம், விசேட திரவியஹோமம், பூர்ணாகுதி- தீபாராதனை, வேததோத்திரபாராயணம்- திருமுறைப்பாரயணம், பிரதான கும்ப வீதி உலாவினை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் 1009 வலம்புரி சங்குகளை கொண்டு நவோத்தர சஹஸ்ர சங்காபிஷேக நிகழ்வானது இடம்பெற்றது.
இதில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.



















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!