Contact Form

Name

Email *

Message *

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுற்றிவளைப்பின் ப…

Image
பண்டிகைக் காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படும் சாரதிகள் தொடர்பில் கடும் சட்ட நடடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்படும் சாரதிகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றிவளைப்புகளின் போது சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவிக்கும் சாரதிகள் தொடர்பில் வாகன போக்குவரத்து திணைக்களத்தினூடாக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
இதனூடாக குறித்த நபருக்கு, ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பின், பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

You may like these posts

Comments