
இன்நிகழ்வின் போது விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.இராஜேந்திரா மற்றும் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன், பொத்துவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.இரவீந்திரன், திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சரோஜா தெய்வநாயகம், சிறப்பு அதிதிகளாக, திருக்கோவில் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. விஜிதா மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலாளர் திரு.பா.சத்திரேஸ்வரன், விநாயகபுரம் சிவனாலய பிரதமகுரு சிவஸ்ரீ.யுவேந்திரசர்மா ஆகியோரும்
அதிதிகளாக, உதவிக்கல்விப் பணிப்பாளர் தமிழ் திரு.S.விநாயகமூர்த்தி, மற்றும் கிராம உத்தியோகத்தர் திரு.N.நிரோஜன் தாதிய சகோதரி, பொது சுகாதார மருத்துவமாது, பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் விடுகைவிழாவின் சிறப்பு நிகழ்வாக மழலைகளின் நாட்டுக்கூத்து நிகழ்வு இடம்பெற்றதுடன் இதனை நெறியாள்கை செய்த அண்ணாவியார் மற்றும் மிருதங்க கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களின் ஏனைய கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!