திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டைமடு வனபரிபாலனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 11 பேர் கடந்த 05.12.2016 திங்கட்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடம் இருந்து உழவு இயந்திரம் ஒன்றையும், 03 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் அடுத்த நாள் கடந்த 06.12.2016 செவ்வாய்க்கிழமை மீண்டும் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 21 பேரை மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து கவுண்டி ஒன்றையும், கப் ரக வாகனம் ஒன்றையும், 06 உழவு இயந்திரங்களையும், 07 மோட்டார் சைக்கிள்களையும், 02 சைக்கிள்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
வேளாண்மைச் செய்கைக்காக உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேரையும்; கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட 04 பேரையுமே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இக் குறித்த வட்டமடுப் பிரதேசம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த நாள் கடந்த 06.12.2016 செவ்வாய்க்கிழமை மீண்டும் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 21 பேரை மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து கவுண்டி ஒன்றையும், கப் ரக வாகனம் ஒன்றையும், 06 உழவு இயந்திரங்களையும், 07 மோட்டார் சைக்கிள்களையும், 02 சைக்கிள்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
வேளாண்மைச் செய்கைக்காக உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேரையும்; கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட 04 பேரையுமே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இக் குறித்த வட்டமடுப் பிரதேசம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!