ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் கட்டடத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது, இப்பணிக்கு அனைவரின் உதவியினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். அத்தோடு கடந்த 2013.10.01ம் திகதி கட்டார் நாட்டில் இருந்து எமது நாட்டு அன்பர்களிடம் இருந்து அறவீடு செய்யப்பட்ட பணமாக கட்டார் றியால் 2750/= (இலங்கை ரூபா 99,000/=) இத் தொகையினை திருக்கோவிலைஸ் சேர்ந்த கோபாலகிருஷ்னன் சுகிதரன், ஞானப்பிரகாசம் கண்ணன் ஆகிய இருவரும் ஆலயத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தொகையினை அன்பளிப்புச்செய்த அன்பர்களுக்கும், உதவி வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
நிர்வாகம்,
ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயம்,
கள்ளியந்தீவு,
திருக்கோவில்.
2013.10.05.