Contact Form

Name

Email *

Message *

திருவெம்பாவை ஆரம்பம்

எமது பிரதேசத்தில் மார்கழி மாதம் இடம்பெறும்  மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை இன்று முதல் ஆரம்பிக்க படுகின்றது  திருவெம்பாவை திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி…

எமது பிரதேசத்தில் மார்கழி மாதம் இடம்பெறும் மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை இன்று முதல் ஆரம்பிக்க படுகின்றது 

திருவெம்பாவை


திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.
இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.
இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.



You may like these posts

Comments