
இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3 (SLEAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (2015/2016) இம்முறை தெரிவான 306 உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்தின் எமது தம்பிலுவிலை சேர்ந்த திரு எம்.சபேஷ்குமார் ஆசிரியர் மற்றும் திரு.கே.கங்காதரன் ஆசிரியர் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டு கொழும்பு ஸ்ரீ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்(BMICH) ல் தங்களின் நியமனக்கடிதங்களை 2017.09.26ம் திகதி செவ்வாய்க்கிழமை இன்றையதினம் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிதிகளாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர்.
மேலும் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு (2015/2016) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 812பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதில் 306 பேர் இவ் நியமனத்திற்காக . தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவருக்கும் எமது தம்பிலுவில் .இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவர்களின் பணிகள் தொடரவும் மற்றும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!