
பொருளாதார அபிவிருத்தியினை மையமாகக் கொண்டு திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் கீழ் செயற்படும் 3 கிராமக் கிளை அங்கத்தவரிற்கு விவசாயம், சிற்றுண்டி வியாபாரம், கோழிவளர்ப்பு, வீட்டுத்தோட்டச் செய்கை போன்ற தொழில்களுக்கான மொத்தமாக கடனாக ரூபா 1,155,000 வினை வழங்கும் நிகவானது திருக்கோவில் பிரதேச நிருவாக உத்தியோகத்தர் திருமதி நிசாந்தி ஜீவகுமார் அவர்களின் தலைமையில் கடந்த 2017.09.12 திகதி அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.L.சிவலோகன் அவர்கள் கிராமக் கிளை தலைவர் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர், மேலும் சுய தொழிலினை செய்து வாழ்வாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் வழங்கினார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!