
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்ப பெண் உறுப்பினர்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் பெண்களின் பொருளாதார அடைவு மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் முற்றிலும் பெண்களின் முயற்சியை கொண்டு தொழிற்பட்டுவரும் "SEWA" நிலையத்தின் ஊடாக திருக்கோவில் ஆதார வைத்தியாலை நோயாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சகாய விலையில் ஆரோக்கியமான சுதேச உணவுப்பொருட்களை வழங்கும் நோக்கில் கடந்த 28.08.2017 காலை வைத்தியசாலை கட்டிட தொகுதியில் சிற்றுண்டிசாலை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிற்றுண்டிச்சாலை ஆரம்பிப்பதற்கான அனுசரணையினை "UNDP" நிறுவனம் "SWOAD" அமைப்பினூடாக வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் .திருக்கோவில் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் M.மோகனகாந்தன், UNDP அமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.மனோஷ், SWOAD அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலையின் தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!