
திருக்கோவில்; பிரதேசத்தில் டெங்கு நிளம்பு பெருகும் விதத்தில் வீட்டுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த மூன்று பேருக்கு ஆயிரத்து ஜந்நூறு ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்
திருக்கோவில் பிரதேச பொதுசுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் ஒன்றினைந்து டெங்கு நிளம்பை ஒழிக்கும் சுகாதார அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 20ம் திகதி தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு வீடாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது வீட்டுச்; சூழலை அசுத்தமாக டெங்கு நுளம்பு பெருகும் விதத்தில் வைத்திருந்த 3 பேரை கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
இவ்வாறு பிணையில் விடுவித்தவர்களை நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜயர் படுத்திய போது இவர்களுக்கு தலா 500 ரூபா வீதம் ஆயிரத்து ஜந்நூறு ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்
---
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!